உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வேட்புமனு கோரல் திகதி அறிவிப்பு



எதிர்வரும் ஜனவரி மாதம் 18ஆம் திகதி தொடக்கம் 21ம் திகதி வரை உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.


இதன்படி உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வேட்புமனுக்கள் எதிர்வரும் ஜனவரி மாதம் 21ம் திகதி 12 மணி வரைக்கும் ஏற்றுக் கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான கட்டுப்பனங்களை எதிர்வரும் 20 ஆம் திகதி 12 மணி வரைக்கும் செலுத்த முடியும் என தேர்தல் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.


மேலும் இந்த அறிவிப்பில் வேட்புமனுக்கள் ஏற்கப்படும் திகதி இடம் பத்திரங்கள், வேட்பாளர்கள், பெண்கள் பிரதிநிதித்துவம் உள்ளிட்ட விடயங்கள் உள்ளடங்கும்.


எதிர்வரும் மார்ச் மாதம் 20ஆம் திகதிக்கு முன்னர் உள்ளூராட்சி உறுப்பினர்கள் நியமிக்கப்பட வேண்டும் அதற்கான தேர்தல் எதிர்வரும் மார்ச் 10 ஆம் ஆம் திகதிக்கு முன்பதாக நடைபெற வேண்டுமென தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.


புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்