அனர்த்த முகாமைத்துவம்: யாழ் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!





காற்றின் வேகமானது அதிகரித்து காணப்படுகின்றமையால் யாழ் மக்கள் மிக அவதானமாக இருக்குமாறு யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவி பணிப்பாளர் என்.சூரியராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த 24 மணி நேரத்தில் யாழ் மாவட்டத்தில் 118.5 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாகவும் நாளை மறுதினம் (04.02.2023) வரை இந்த மழை தொடரும் என மேலும் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், திருகோணமலையின் சீனா குடாவுக்கும் உப்புவெளிக்கும் இடைப்பட்ட பகுதியில் கரையைக் கடக்கும் என்ன எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் வடக்கு மாகாணத்தின் பல பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 35 கிலோமீட்டர் வேகத்தில் வீசுகின்ற நிலையில் இந்த ஆழ்ந்த காற்றழுத்த மண்டலம் கரையை கடக்கும் போது காற்றின் வேகமானது மேலும் அதிகரிக்கலாம்.

இதன்போது வடக்கு மக்கள் தொடர்ந்து அவதாரமாக இருப்பது  அவசியமானது என என். சூரியராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்