பதினொன்றாம் தர பாடசாலை மாணவி ஒருவரை பாலியல் ரீதியில் கவர்ந்திழுக்கும் வகையில் அவரது கைத்தொலைபேசிக்கு தொடர்ச்சியாக ஆபாச புகைப்படங்கள் மற்றும் வாட்ஸ்அப் செய்திகளை அனுப்பிய சந்தேகத்திற்குரிய பாடசாலையின் பிரதி அதிபர் கைது செய்யப்பட்டு நேற்று அத்தனகல்ல நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
அத்தனகல்ல ஊராபொல பிரதேசத்தை சேர்ந்த ஒருவரே இவ்வாறு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சந்தேக நபர் அந்தப் பாடசாலையின் ஒழுக்காற்று ஆசிரியரும் ஆவார்.
சம்பந்தப்பட்ட பிரதி அதிபர் தனது கையடக்கத் தொலைபேசியில் அவரின் அந்தரங்க உறுப்புகளை புகைப்படம் எடுத்து வாட்ஸ் அப் மூலம் மாணவிக்கு அனுப்பியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சந்தேகத்திற்குரிய இந்த பிரதி அதிபர், தரம் 11 மாணவி ஒருவருக்கு முன்னரும் இவ்வாறான WhatsApp செய்திகளை அனுப்பியிருந்தமை பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கம்பஹா பிரிவு சிறுவர் மற்றும் பெண்கள் துஷ்பிரயோக தடுப்பு பணியகத்திற்கு கிடைத்த முறைப்பாட்டின் பிரகாரம், கம்பஹா பிரிவு சிறுவர் மற்றும் பெண்கள் துஷ்பிரயோக தடுப்பு பணியகத்தின் பிரதான பரிசோதகர் வினேசியா பிரேமரத்ன அத்தனகல்ல பொலிஸ் நிலைய பிரதான பரிசோதகர் எச்.எம்.வை. திரு. நாலக உள்ளிட்ட அதிகாரிகள் குழு சந்தேகத்திற்குரிய ஆசிரியரைக் கைது செய்தது.