கார் புகையிறத கடவையில் விபத்து: இருவர் பலி


tamillk.com

கண்டியிலிருந்து மாத்தறை நோக்கி பயணித்த சியனே குமாரி எனும் கடுகதி புகையிரதத்துடன் கார் ஒன்று மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தின் போது காரில் பயணித்த இருவர் உயிரிழந்துள்ளனர்.

கொக்கல - ஹபராதுவ புகையிறத நிலையத்திற்கும் இடையில் உள்ள புகையிரத கடவையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தின் போது புகையிறத கடவைக்கு குறுக்கே பாதுகாப்பற்ற வகையில் சாரதியின் கவலையின்மையாக காரை செலுத்திய நிலையில் இவ்வாறு விபத்து இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த விபத்து ஏற்பட்ட போது கார் சிறிய தூரத்திற்கு இழுத்துச் செல்லப்பட்ட நிலையில் புகையிரதத்தை நிறுத்தி குறித்த விபத்தில் சிக்கிய காரில் இருந்தவர்களை மீட்பதற்கு மக்கள் முயற்சி செய்த போதும் அவர்கள் இந்த விபத்தின் போது உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்