ஆசிரியர்களின் இடமாற்ற சபையை இடைநிறுத்தி கலைக்குமாறு ஜனாதிபதி ரனில் விக்கிரமசிங்க உத்தரவிட்டுள்ளார்.
இதன்படி நடைமுறைப்படுத்தப்பட்ட இருந்த சுமார் 12,500 ஆசிரியர்களின் இடமாற்றங்கள் அனைத்தும் இரத்து செய்யப்படவுள்ளன.
மாணவர்களின் க.பொ.த சாதாரண தரம் மற்றும் உயர்தரம் அத்தோடு பாடசாலை கல்விகளின் ஏற்படும் இடையூறுகளை கருத்தில் கொண்டு இந்த தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர்களின் இடமாற்றத்தின் அடிப்படையில் பாடசாலை கல்வி பணிகளில் சிக்கல்கள் ஏற்படாமல் தடுப்பதற்காகவே ஜனாதிபதி இந்த முடிவினை மேற்கொண்டதாக தெரியவந்துள்ளது
Tags:
srilanka