வடக்கு கிழக்கு நிர்வாக முடக்கல் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெளியிட்டுள்ள தகவல்

tamillk.com


வடக்கு - கிழக்கு மாகாணங்களில் இடம்பெற உள்ள நிர்வாக முடக்கல் மக்களின் நாளாந்த வாழ்வாதாரத்தை முடக்குகின்ற போராட்டமாகும் அத்தோடு நாட்டின் பொருளாதாரத்திற்கும் பாரதூரமான தாக்கத்தை செலுத்துகின்ற போராட்டமாகும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.


இந்த நிர்வாகம் முடக்களுக்கு அழைப்பு விடுத்துள்ள தமிழ்க் கட்சிகள் இவற்றை கவனத்தில் கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.


பயங்கரவாத எதிர்ப்பு சட்ட வரவு கொண்டு வரப்படுவதால் மக்களை அடக்கி கொடுக்கும் வகையில் சட்டம் அமையும் என தமிழ் கட்சிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளினால் பரப்பப்படும் வதந்திகளை நாம் முற்றாக மறுக்கின்றோம்.


இவ்வாறு கொண்டு வரப்படவுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் பாராளுமன்றத்தில் முன் வைக்கப்பட்ட பின்னர் தான் அது தொடர்பான கருத்துக்களை வெளியிட முடியும். சட்ட வரைவில் திருத்தங்களையும் மேற்கொள்ள முடியும்.


அதற்கிடையில் சட்ட வரவுக்கு எதிராக போர் கொடி தூக்குவதும் நிர்வாகம் முடக்கல் செயல்பாடுகளில் ஈடுபடுவதும் ஏற்றுக்கொள்ள முடியாத எனவும் இவ்வாறான செயல்பாட்டால் நாளாந்த மக்களின் வாழ்வாதாரத்தை முடக்கும் போராட்டமாக அமையும்.


இந்த நிர்வாக முடக்களுக்கு பிரதானமாக காரணமாக வடக்கு மற்றும் கிழக்கில் முன்னெடுக்கப்படும் பௌத்த மயமாக்களே தமிழ் கட்சிகள் குறிப்பிடுகின்றன என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் ஊடகவியலாளர் கேள்வி எழுப்பிய போது.


இந்த கோரிக்கைகள் தொடர்பாக உரிய கவனம் செலுத்துவோம் அத்தோடு வடக்கு கிழக்கில் பௌத்த ஆக்கிரமிப்பு என்று சொல்லப்படுவது ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.


புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்