கடத்தப்பட்டதாக கூறப்பட்ட சிறுமி அனுப்பிய பரபரப்பு காணொளி



( srilanka tamillk tamil ) மினுவாங்கொடை ஒபாத்த பிரதேசத்தில் இருந்து காதலனால் கடத்தப்பட்டதாக கூறப்படும் 15 வயது சிறுமி தனது தாயாருக்கு அனுப்பி வைக்கப்பட்ட காணொளி மூலமாக தான் கடத்தப்படவில்லை என தெரிவித்துள்ளார்.

சிறுமி அனுப்பிய காணொளியில் குறிப்பிடப்பட்டுள்ளது,

என்னை கடத்தியதாக விட்டதாக செய்திகள் வெளியானது அவை அனைத்தும் உண்மை இல்லை. நான் விரும்பிய காதலனுடன் சென்றேன்.

எமது உறவை முதல் இரு வீட்டாரும் விரும்பினார். பின்பு எனது அம்மாவுக்கு பிடிக்கவில்லை எனக்கு 22 வயதுக்கு மேற்பட்ட ஒருவரை திருமணம் செய்து வைக்க அம்மா நினைத்தார் இந்த திருமணம் பிடிக்காமல் நான் சண்டை போட்டேன்.

நான் விரும்பியே இந்த பயணத்தை மேற்கொண்டேன். இப்போது நாங்கள் இருவரும் மகிழ்ச்சியாக இருக்கின்றோம். எங்களை வாழ விடுங்கள் என வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இந்த வீடியோவை அவர் முக்கிய ஊடகங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

எனினும் இது தொடர்பாக தாய் வெளியிட்ட காணொளியில் கடத்தல் தொடர்பான சிசிடி காணொளியும் இடம்பெற்றுள்ளது.

குறித்த சிறுமிக்கு 15 வயது என்பதால் அவர் திருமணம் செய்ய தடை செய்யப்பட்டுள்ளதாகவும்.

இது தொடர்பாக பொலிஸ் ஊடக பேச்சாளர் கூறுகையில் கடத்தப்பட்டதாக கூறப்படும் சிறுமியின் தாய் மாத்திரம் உலகங்களுக்கு முறைப்பாடு செய்துள்ளதாகவும் இந்த கடத்தல் தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கப்படவில்லை எனவும் இருவரும் விரும்பிய சென்று உள்ளதாகவும் சிறுமி குறிப்பிட்டுள்ளார். என அவர் மேலும் கூறியுள்ளார்.


Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்