களுத்துறை மாணவியின் மரண விசாரணை CIDயிடம்

 

tamillk

களுத்துறை விடுதி ஒன்றின் மேல் மாடியில் இருந்து தவறி விழுந்து மாணவி உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கு பொலிஸ் மா அதிபரின் உத்தரவின் பேரில் இன்று (மே 11) குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.


மாணவியின் மர்ம மரணம் தொடர்பான விசாரணைகளில் அவர் தங்கியிருந்த விடுதி உரிமையாளரின் மனைவியும் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.


சந்தேக நபர் களுத்துறை தெற்கு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.


குறித்த பெண் களுத்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.


இதேவேளை, பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, ​​உயிரிழந்த மாணவிக்கு ஆசிரியர் ஒருவரிடமிருந்து கடைசி தொலைபேசி அழைப்பு வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.


அதன்படி அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்வதற்கும் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்