வவுனியாவில் புளியங்குளம் பகுதியில் குடும்பஸ்தர் சடலமாக மீட்பு

vavuniya tamil news


( vavuniya tamil news-tamillk ) வவுனியா புளியங்குளம் மதியாமடு பகுதியில் இன்று புதன்கிழமை காலை (31) குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர்  புளியங்குளம் மதியாமடு பகுதியில் வசித்து வந்த கெ.சதீஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளது.



செவ்வாய்க்கிழமை (30) இரவு தனது தோட்டத்திற்குச் சென்று குறித்த குடும்பஸ்தார் தவறான முடிவு ஒன்றை எடுத்து தூக்கில் தொங்கி மரணம் அடைந்துள்ளார்.



குறித்த குடும்பஸ்தர் தூக்கில் தொங்கி இருப்பதை அவதானித்த பொதுமகனொருவர் புளியங்குளம் பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்கியதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் சடலத்தை மீட்டெடுத்துள்ளனர்.



இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புளியங்குளம் பொலிஸ் விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்