( vavuniya tamil news-tamillk ) வவுனியா குடிவரவு - குடியகல்வு பிராந்திய காரியத்திற்கு முன்பாக சந்தேகத்திற்கு இடமான 10 நபர்கள் அதிரடியாக கைது செய்யப்பட்டதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று(30) இரவு 11 மணி அளவில் இந்த கைது சம்பவங்கள் இடம் பெற்றுள்ளது.
வவுனியா குடி வரவு குடியகல்வு பிராந்திய அலுவலகத்திற்கு முன்பாக கடவு சீட்டுகளை பெறுவதற்காக வரிசையில் நிற்பதற்காக ஊழியர்களை அமர்த்தி இந்த வரிசைக்காக பெற்றுக் கொடுப்பதற்காக 5000 ரூபாயும் அதேபோன்று வரிசையின்றி உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு கடவுச்சீட்டு பெற்றுக் கொள்வதற்காக 25,000 ரூபாய் என இடைத்தாகர்களினால் பெறப்படுவதாக செய்திகள் வெளியாகிய நிலையில்.
இரவு 11 மணி அளவில் வவுனியா குடி வரவு மற்றும் குடியகல்வு பிராந்திய காரியத்துக்கு முன்பாக திடீர் சோதனை நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்ட போது தமது தேவைக்கு அல்லாது குறித்த பகுதியில் பணத்திற்காக வரிசையில் நின்றோர். அதேபோன்று சந்தேகத்திற்கிடமானா முறையில் அவ்விடத்தில் ஒன்று கூடியிருந்தோர் என 10 நபர்களை வவுனியா பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மேலும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளவர்கள் விசாரணைக்கு பின்பு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.