வவுனியாவின் இராணுவ அதிகாரிக்கு கடுமையான தீர்ப்பு: நீதிபதி இளஞ்செழியன்

vauniya tamil news


( vavuniya tamilஆறு வயதான பாடசாலை மாணவி பாடசாலை விட்டு வீடு செல்லும் போது அவரை காட்டுக்குள் கடத்திச் சென்று துஷ்பிரயோகம் செய்த நெடுங்கேணி இராணுவ முகாமில் உள்ள இராணுவக் கோப்ரல் ஒருவருக்கு 15 ஆண்டு கடூழிய சிறை தண்டனை விதித்து வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.



இந்த வழக்கு தொடர்பாக இன்றைய தினம் (25.05.2023) வவுனியா மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது இந்த தீர்ப்பு பிறப்பிக்கப்பட்டுள்ளது.



14.05.2013, அன்று பாடசாலையிலிருந்து வீடு திரும்பிய சிறுமியை ஆள் கடத்தல் குற்றச்சாட்டுக்கும், அதேபோன்று சிறுமியை கடத்தி துஷ்பிரயோகம் செய்த இரண்டாவது குற்றச்சாட்டுக்கும் சட்டமா அதிபரினால் இரு குற்றங்கள் அடங்கிய குற்ற பத்திரிக்கையை வவுனியா மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.



இதனைத் தொடர்ந்து வழக்கின் தீர்ப்பானது மாணவி வெள்ளை சீருடையில் இரத்தம் படிந்த நிலையில் காட்டுக்குள் கண்டுபிடித்தமையும், விசேட சி ஐ டி பொலிஸ் இராணுவ அதிகாரியை கைது செய்தமையும், இவ்வாறு கைது செய்யப்பட்ட இராணுவ சிப்பாயை அடையாள அணி வகுப்பில் அடையாளம் காட்டியமை, அத்தோடு நெடுங்கேணி விஜயபாகு இராணுவ முகாம் கட்டளை அதிகாரி நீதிமன்றத்திற்கு சாட்சியமளித்தமை, காட்டுக்குள் இருந்து சிறுமியின் சப்பாத்துக்கள் மீட்கப்பட்டமை, சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கை என்பவற்றை வைத்து இராணுவ கோப்ரல் குற்றவாளி என நீதிபதி இளஞ்செழியன் தீர்ப்பளித்துள்ளார்.

தண்டனை

15 ஆண்டுகள் கடூழிய சிறை தண்டனை விதிக்கப்பட்டதுடன் பாதிக்கப்பட்ட சிறுமிக்கும் 5 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்கவும், இந்த நஷ்ட ஈட்டை கட்ட தவறும் பட்சத்தில் இரண்டு ஆண்டு கடூழிய சிறை தண்டனை உட்படுத்தப்படவும் மற்றும் தண்ட பணமாக 10 ஆயிரம் ரூபாய் கட்ட தவறின் மேலும் இரு மாதம் கடூழிய சிறைத்தண்டனை என்று வவுனியா மேல் நீதிமன்றத்தின் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்