( srilanka tamil news-tamillk ) 2022 ஆம் ஆண்டிற்கான இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள வருடாந்த அறிக்கையின்படி, 2022 டிசெம்பர் மாதத்துடன் முடிவடைந்த ஒன்பது மாதங்களில் ஸ்ரீலங்கன் விமான சேவையின் இழப்பு 4.4 பில்லியன் ரூபாவாக குறைந்துள்ளது.
2021 ஆம் ஆண்டின் இந்த காலப்பகுதியில், ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் 15.6 பில்லியன் ரூபா நட்டத்தை பதிவு செய்திருந்தது. ஆனால் 2022ஆம் ஆண்டின் கடந்த ஒன்பது மாதங்களில் இந்த நட்டம் 4.4 பில்லியன் ரூபாவாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய வங்கியின் அறிக்கை தெரிவிக்கிறது. இக்காலப்பகுதியில் ஸ்ரீலங்கன் விமான சேவையானது வருமானத்தில் 222.9 வீத குறிப்பிடத்தக்க வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இயக்க செலவுகள் 176.0 சதவீதம் அதிகரித்துள்ளது.
மோசமான விமான எரிபொருள் தட்டுப்பாடு, விமானங்களுக்கு எரிபொருள் நிரப்புவதற்கான எரிபொருள் பற்றாக்குறை, மற்ற நிறுத்தங்கள் மூலம் விமான நிறுவனங்கள் எரிபொருள் நிரப்புதல் போன்ற காரணங்களால் இயக்கச் செலவு அதிகரித்துள்ளது. எவ்வாறாயினும், ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் மறுசீரமைப்பு தொடர்பான பரிந்துரைகளை வழங்குவதற்கு நாணய, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சில் நிறுவப்பட்டுள்ள அரச நிறுவனங்களின் மறுசீரமைப்பு பிரிவுக்கு நியமிக்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கியின் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.