( srilanka tamil nes-tamillk ) களுத்துறையில் ஐந்து மாடி கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்த 16 வயதுடைய பாடசாலை மாணவி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நான்கு சந்தேகநபர்களும் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இன்று (15) களுத்துறை நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.
சிறுமியை விடுதிக்கு அழைத்துச் சென்ற இளம் தம்பதி, ஹோட்டலின் உரிமையாளரின் மனைவி மற்றும் பிரதான சந்தேகநபரின் சாரதியாக இருந்த நபர் ஆகியோர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட போது, இறந்த சிறுமியின் தாயார் உட்பட கிட்டத்தட்ட 100 பேர் கல்லுப்பாறை நீதிமன்றத்திற்கு வெளியே வரிசையில் நின்று சிறுமிக்கு நீதி கோரி மௌனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உயிரிழந்த சிறுமிக்கு நீதி கிடைக்க வேண்டும், காவல்துறை உரிய முறையில் விசாரணை நடத்த வேண்டும், தரமற்ற கட்டிடம் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு கலுப்பாறையில் 50 மீட்டர் தூரம் வரை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
களுத்துறை நகரில் விசேட பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.