போரின் இறுதிக் கட்டத்தில் உயிர் நீத்தவர்களுக்கான நினைவு அஞ்சலியாக முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தலை முன்னிட்டு சிவில் சமூக அமைப்புக்களால் இன்று(18) கொழும்பு பொரளை கனத்தை மயான சந்தியில் வைத்து நினைவேந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
நினைவேந்தல் ஏற்பாடுகள் செய்து கொண்டிருந்தபோது அவற்றை குழப்பும் வகையில் சிங்கள ராவய அமைப்பைச் சேர்ந்த சிலர் அவ்விடத்திற்கு வந்து நினைவேந்தலை நிறுத்துமாறும் ஏற்பாட்டார்களுடன் வாய் தாக்கத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அங்கு வருகை தந்திருந்த சிங்கள ராவய அமைப்பை சேர்ந்தவர்கள் புலிகளுக்கான நினைவேந்தல் எனக்கு வேண்டாம் என்ற வசனத்தை எழுதப்பட்ட பதாகைகளுடன் நினைவேந்தல் ஏற்பாடுகளை குழப்புவதற்கு முயற்சித்தனர்.
இதன் போது அங்கு அமைதியற்ற நிலைமை ஏற்பட்டது. நினைவேந்தல் நிகழ்வுகள் ஆரம்பிக்க முன்பே அவ்விடத்துக்கான பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டது.
இந்த நிலையில் சிங்கள ராவய அமைப்பினரால் அமைதியற்ற நிலைமை ஏற்பட்டபோது அங்கு கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸார், இராணுவத்தினரும் மற்றும் விசேட அதிரடி படையினர் நினைவேந்தலை நிறுத்துமாறு ஏற்பாட்டாளர்களிடம் அறிவுறுத்திய போதும். தேசிய அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அருள் தந்தை சக்திவேல் அவ்விடத்தில் தெரிவித்த விடயம்.
எவ்வித குழப்பங்களையும் ஏற்படுத்தும் நோக்கில் இந்த நிகழ்வை ஏற்பாடு செய்யவில்லை என்பதால், நினைவேந்தலை நிறுத்த முடியாதென ஏற்பாட்டாளர்கள் பாதுகாப்பு தரப்பினரிடம் தெரிவித்தனர்.
இருந்த போதும் ஏற்பாடு செய்த மாதிரி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தீபம் ஏற்றப்பட்டு கஞ்சியும் வழங்கப்பட்டது.
அதேபோன்று எதிர்வரும்(22) திங்களன்று நீர் கொழும்பு பால்தி சந்தியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முன்னேற்பாடு நிகழ்வொன்றும் ஏற்பாடு செய்யப்படவுள்ளதாவும் இதன் போது அங்கு எவ்விதமான தடைகள் ஏற்பட்டாலும் அங்கும் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம் பெறும். என்ன அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அருள் தந்தை சக்திவேல் தெரிவித்தார்.





