( srilanka tamil news-tamillk ) கொழும்பில் இருந்து திருகோணமலை நோக்கி பயணித்த இரவு அஞ்சல் புகையிரதத்தில் அக்போபுர மற்றும் கித்துல் ஊது புகையிரத நிலையங்களுக்கு இடையில் இரண்டு யானைகள் மோதியுள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.
காயம்பட்ட யானை காப்புக்காட்டுக்குள் தப்பியிருக்கலாம்.
விபத்து காரணமாக ரயில் இரண்டு மணி நேரம் தாமதமாக இயக்கப்பட்டதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.\
சோமாவதி தேசிய பூங்கா மற்றும் கௌடுல்லா தேசிய பூங்கா எல்லையை அண்டிய ரயில் பாதையில் யானைகள் அடிக்கடி விபத்துக்குள்ளாகி வருவதாக வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.
Tags:
srilanka