( vavuniya tamil news- tamillk ) இன்று மாலை வவுனியாவில் TVS வகையை சேர்ந்த மோட்டார் சைக்கிள் ஒன்று திடீரென்று தீ பற்றி எரிந்ததால் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது.
இதேவேளை இந்த மோட்டார் சைக்கிளில் பயணித்த கணவன் மனைவி பிள்ளைகளுக்கு எவ்விதமான பாதிப்புகளும் ஏற்படாமல் தப்பி உள்ளனர்.
எனினும் தீ தொடர்ந்து எரிந்ததால் அங்கிருந்த பொது மக்கள் மிகுந்த போராட்டத்திற்கு மத்தியில் இந்த மோட்டார் சைக்கிளின் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த சம்பவமானது A9 வீதி ஊடாக பயணித்துக் கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மணிக்கூட்டு கோபுரம் அருகில் திடீரென தீப்பற்றி எரிந்தது. இந்த விபத்துக்கான காரணம் மோட்டார் சைக்கிளில் மின் கசிவு ஏற்பட்டதால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகக்கப்படுகிறது.
எனினும் தீ பற்றிய மோட்டார் சைக்கிள் முற்றாக சேதம் அடைந்துள்ளது.
Tags:
Vavuniya-news