( srilanka tamil news-tamillk ) பாணந்துறை கிரிபெரியவில் உள்ள இரண்டு மாடிக் கட்டிடத்தில் கொரோனா உடைகள் உள்ளிட்ட சுகாதார உபகரணங்கள் வைக்கப்பட்டிருந்த களஞ்சியசாலையில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக ஹிரண பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அந்தக் கிடங்கில் ஏறக்குறைய 7 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்பட்டாலும், இது தொடர்பாக இதுவரை எந்த அறிக்கையும் அளிக்கப்படவில்லை என்று போலீஸார் தெரிவித்தனர்.
தீயை அணைக்க ஹொரண களுத்துறை மொரட்டுவ மற்றும் தெஹிவளை மாநகர சபைகளின் தீயணைப்பு பிரிவுகள் அழைக்கப்பட்டன.
கொரோனா உடைகள், முகமூடிகள், சத்திரசிகிச்சையின் போது அணிந்திருந்த ஆடைகள் உள்ளிட்ட பல சுகாதார உபகரணங்களும் அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இதன்படி தெஹிவளை, களுத்துறை மற்றும் மொரட்டுவ மாநகர சபைகளின் தீயணைப்பு பிரிவுகளும் உதவிக்கு அழைக்கப்பட்டதாக ஹொரணை மாநகர சபையின் இயந்திர தீயணைப்பு வீரர் பி.டி.அபேபால தெரிவித்தார்.
தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வாகனங்கள் உட்பட 11 தண்ணீர் பவுசர்கள் மற்றும் முப்பது தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
தீ விபத்தின் போது கட்டிடத்திற்குள் எவரும் இருக்கவில்லை எனவும், தீ விபத்து தொடர்பில் பலத்த சந்தேகம் நிலவுவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.