விரைவில் கையடக்க தொலைபேசியின் விலைகள் குறையும் என வெளியான தகவல்

srilanka tamil news


கையடக்க தொலைபேசிகளின் விலைகள் எதிர்காலத்தில் குறையும் என தகவல் வெளியாகியுள்ளது.


இதன்படி கையடக்க தொலைபேசிகள், குளிர்சாதன பெட்டி, மின்விசிறிகள், பழங்கள் போன்ற அத்தியாவசிய பொருட்களின் இறக்குமதி செய்வதற்கு விதிக்கப்பட்டுள்ள விதிகள் தளர்த்தப்படவுள்ளன.



இது தொடர்பாக இன்று (01.06.2023) மத்திய வங்கி அறிவித்துள்ள விடயத்தில் 843 வகையான பொருட்களை இறக்குமதி செய்வதற்கான பண வரம்பு தேவையை நீக்குவதாக அறிவித்துள்ளது.



அண்மை காலங்களில் பணவீக்கம் மற்றும் கையடக்க தொலைபேசிகளின் இறக்குமதி மீதான கட்டுப்பாடுகள் காரணமாக கையடக்க தொலைபேசிகளின் விலைகள் மிகவும் வேகமாக அதிகரித்தமை காணக்கூடியதாக இருந்தது.

Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்