வவுனியாவில் இன்று கனேடிய பிரதமருக்கு எதிராக மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று(24) மாலை வவுனியா பழைய பேருந்து நிலையத்தில் நடைபெற்றது.
குறித்த போராட்டம் ஆனது சிங்கள தமிழ் மற்றும் முஸ்லிம் தேசிய ஒற்றுமைக்கான இயக்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.
இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பயங்கரவாதம் எங்களுக்கு வேண்டாம் ஐஸ்டின் ட்ரூடோ இதைக் கேள், உங்களுடைய சுதந்திரத்தினை எங்களுக்கு தா, படுகொலை எங்கே நடந்தது,ஐஸ்டின் ட்ரூடோ இதைக கேள், உனக்கு தேவை பயங்கரவாதம், எங்களுடைய நாட்டில் கை போடாதே ஐஸ்டின் ட்ரூடோ, போன்ற கோசங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் இலங்கையின் இறையாண்மைக்கு கை கொடுங்கள், கனடா இனவாதத்தை பற்ற வைக்காதீர்கள் அது குற்றம். ஆகிய பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உருவ பொம்மைகள் எரிப்பு
போராட்டத்தின் இறுதியில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் கனடா நாடாளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்த சங்கரி ஆகியோரின் உருவ பொம்மைகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களால் எரிக்கப்பட்டது.



