யாழ்ப்பாணம் அராலி வட்டுக்கோட்டை வீதியில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக யாழ்.பொலிசார் தெரிவித்துள்ளனர்.
சுமார் 39 வயதுடைய மகேஸ்வரன் மயூரன் என்ற நபரும், ஜெயசுந்தரம் சரோஜன் என்ற 29 வயதுடைய நபருமே சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
அதிவேகமாக வந்த இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மஹுன மீது மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதுடன் விபத்து தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.



