பளை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒன்றில் 13 வயதுடைய பாடசாலை மாணவன் உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்து சம்பவமானது இன்று மாலை(5) இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம்
துணிச்சக்கர வண்டியில் பாடசாலை மாணவன் சென்று கொண்டிருந்தபோது குறித்த மாணவன் மீது பட்டா ரக வாகனம் ஒன்று மோதியதாலே இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.
விபத்தில் உயிரிழந்த மாணவன் பளை முள்ளையடி பகுதியைச் சேர்ந்த ராஜா பாஸ்கரன் யகுசிகன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்து சம்பவம் தொடர்பாக பட்டா ரக வாகனத்தின் சாரதி கைது செய்த பட்டதோடு மேலதிய விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.