விடுதலைப் புலிகளின் தலைவரின் மரணம் குறித்து: மைத்திரி யாழில் வெளியிட்ட முக்கிய தகவல்

 jaffna news-tamillk


விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மரணம் தொடர்பாக நான் முன்னாள் பாதுகாப்பு பதில் அமைச்சராக இருந்தபோது இது தொடர்பாக எதுவும் அறிவிக்கவில்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.


மேலும் தெரிவிக்கையில் பிரபாகரனின் மரபணுப் பரிசோதனை மேற்கொண்டாமை தொடர்பாக எதுவும் தாம் அறியவில்லை என இன்று இடம்பெற்ற யாழ்ப்பாணத்தில் ஊடகவியாளர் சந்திப்பின்போது இவற்றை தெரிவித்தார்.



இறுதி யுத்தத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளை தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கொல்லப்பட்டும், மரபணு பரிசோதனைக்காக இராணுவத்தால் மாதிரிகள் எடுக்கப்பட்டு, அத்துடன் மீட்கப்பட்ட உடல் அவருடையது என உறுதி செய்யப்பட்டதாக இலங்கை இராணுவம் கூறியிருந்தது.



எனினும் இது தொடர்பாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலமாக முயற்சித்த போதிலும் அதனை இராணுவத்தினர் மறுத்திருந்தனர்.


இறுதி யுத்தத்தின்போது தாங்கள் பாதுகாப்பு அமைச்சராக இருந்த அடிப்படையில் பிரபாகரின் மரபணு பரிசோதனை மேற்கொண்டமை தொடர்பாக மைத்திரிபாலயிடம் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பிய போது.



இதற்கு பதில் அளித்து மைத்திரிபால சிறிசேன, உண்மையில் தான் இறுதி இரண்டு வாரங்களே பாதுகாப்பு அமைச்சராக இருந்ததாகவும் இதன் போது மரபணு பரிசோதனை மேற்கொண்டமை தொடர்பாக அன்று தான் அறியவில்லை எனவும் இப்போது வரைக்கும் எனக்கு அது தொடர்பாக தெரியாது எனவும் கூறினார்.



விடுதலைப் புலிகளுக்கு எதிராக இறுதி யுத்தத்தில் தமக்கே பாரிய பங்கு உள்ளதாகவும் ஜனாதிபதியாக இருந்த போது மைத்திரிபால சிறிசேன கூறியமை தொடர்பாக ஊடவியலாளர்கள் மீண்டும் கேள்வி எழுப்பியுள்ளார்.


மேலும் ஜனாதிபதியாக இருந்த போது இலங்கையின் சுதந்திர தின உரையிலும் மைத்திரிபால சிறிசேன, குறிப்பிட்ட விடயத்தை கூறியிருந்ததையும். யாழ்ப்பாணத்தில் இடம் பெற்ற ஊடாகவியாளர் சந்திப்பில் ஊடகவியாளர் ஒருவர் இவ்விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.

தலைவர் இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்டாரா

இதற்கு பதிலளித்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அப்போதைய ஜனாதிபதியாக இருந்த மஹிந்த ராஜபக்ச, வெளிநாட்டில் இருந்தபோதிலும் நாட்டின் பாதுகாப்பு சார்ந்த உத்தரவுகளை அவரே வழங்கி இருந்தார் எனவும் மைத்திரிபால சிறிசேன சுட்டிக்காட்டியுள்ளார்.



 எனினும்யுத்தத்தை வழிநடத்திய விடயங்களில் தமக்கு எந்த ஒரு தொடர்பும் இல்லை எனவும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுட்டிக்காட்டியுள்ளார்.


ஜனாதிபதியாக இருந்த மஹிந்த ராஜபக்ச வெளிநாடுகளுக்கு செல்லும் போது தம்மிடம் பொறுப்புக்களை கையளித்துவிட்டு சென்றிருந்தார் இதன் போதும் முன்னெடுக்கப்பட்டு வந்த செயல்பாடுகளை தான் தொடர்ந்ததாகவும் மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.


இறுதி யுத்தத்தின் போது வேலுப்பிள்ளை பிரபாகரன் கொல்லப்பட்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என மீண்டும் ஊடகவியலாளர் கேள்வி எழுப்பியபோது.




இதற்கு பதிலளித்த மைத்திரிபால சிறிசேன வேலுப்பிள்ளை பிரபாகரனின் உயிரிழப்பு தொடர்பாக எந்த ஒரு விடயமும் தமக்கு அறிவிக்கப்படவில்லை என மேலும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்