srilanka tamil news - tamillk news
ஹோமாகம கட்டுவன கைத்தொழில் கிராமத்தில் அண்மையில் தீப்பிடித்த தொழிற்சாலையில் மீண்டும் தீப்பிடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக ஹோமாகம தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
அதன்படி, தொழிற்சாலையைச் சுற்றி கடும் புகை பரவியுள்ளதாகவும், அதனைக் கட்டுப்படுத்த தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கடந்த வாரம் தீப்பிடித்த தொழிற்சாலையில் சேமித்து வைக்கப்பட்டிருந்த குளோரின் மீது மழைநீர் விழுந்ததால் புகை கிளம்பியதாக போலீசார் சந்தேகிக்கின்றனர்.
பனாகொட இராணுவ முகாமின் சிறீலங்கா காவல்துறை அதிகாரிகள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் தீ அபாயத்தைக் கட்டுப்படுத்தி வருகின்றனர்.
Tags:
srilanka