world news - tamillk news
வடகொரியாவில் கடல் சீற்றம் காரணமாக நிலப்பகுதிகளில் கடல் நீர் புகுந்ததால் ஏற்பட்ட வெள்ளத்தில் சுமார் 560 ஹெக்டேயர் பயிர் நிலங்கள் அழிவடைந்துள்ளன.
அழிவுகளை பார்வையிட்டுள்ள வடகொரிய ஜனாதிபதி கிம் ஜோங்உன்,
இது அதிகாரிகளின் பொறுப்பற்ற செயல் காரணமாக நடந்துள்ளதாக அதிகாரிகளை கடுமையாக சாடியுள்ளார்.
இதேவேளை கிம் ஜோங் உன் வடகொரியாவின் கிழக்குக் கடற்கரையில் அமைந்துள்ள விவசாய நில மறுசீரமைப்புத் திட்டப் பணிகளை பார்வையிடச் சென்றுள்ளார். கடல் அலையின் சீற்றம் காரணமாக கடல் நீர்இ வயல் நிலங்களுக்குள் புகுந்து 270 ஹெக்ரேயரில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் உட்பட 560 ஹெக்ரேயர் நிலம் அழிவடைந்துள்ளது.
இந்த அழிவுகளை பார்வையிட்ட ஜனாதிபதி கிம், நாட்டின் பிரதமர் கிம் டோக் ஹூன் மற்றும் அதிகாரிகளின் பொறுப்பற்ற செயல் என சாடியுள்ளார்.
மேலும், நாட்டின் பொருளாதாரத்தை வீணடித்துவிட்டதாகவும் குற்றம் சுமத்தியுள்ளார்.
கடந்த சில ஆண்டுகளபக கிம் டோக் ஹூன் அமைச்சரவையின் நிர்வாகம்இ பொருளாதார நிலைமை என்பன மிகவும் சீர்குலைந்துள்ளதாகவும் வடகொரிய செய்திகள் தெரிவிக்கின்றன.