srilanka-accident news-tamillk news
பொலன்னறுவையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த சிறிய சொகுசு வான் ஒன்று இன்று (24) தம்புள்ளை குருநாகல் பிரதான வீதியில் கால்வாயில் வீழ்ந்ததில் நான்கு பேர் காயமடைந்து தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கலேவெல பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
காயமடைந்தவர்களில் ஐந்து வயது மகளும் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பொலன்னறுவை தம்பல பிரதேசத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த போது காரை ஓட்டி வந்த அதே குடும்பத்தின் சாரதி தூங்கியதால் அதிவேகமாக வந்த கார் சுமார் முப்பது அடி தூரத்தில் ஓடையில் கவிழ்ந்தது.