யாழில் கிருமி தொற்றுக்கு உள்ளாகி இளைஞன் உயிரிழப்பு !Tamillk news

tamillk news


 அதிகளவான ஹெரோயினை ஊசி மூலம் நுகர்ந்து வந்த இளைஞன் ஒருவர் கிருமி தொற்றுக்கு உள்ளாகி  சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.


யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவர் திடீர் சுகவீனம் காரணமாக யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் வைத்திய பரிசோதனையில் இளைஞன் கிருமி தொற்றுக்கு உள்ளாகி இருப்பதும்  போதைக்கு அடிமையானவர் என்பதனையும் வைத்தியர்கள் கண்டறிந்தனர். 



இந்நிலையில்   திங்கட்கிழமை   குறிப்பிட்ட இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 


அதேவேளை இன்னுமொரு இளைஞனும் போதைக்கு அடிமையான நிலையில் உடலில் கிருமி தொற்றுக்கு உள்ளாகி யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்