நீண்ட வார இறுதி விடுமுறை! - பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை! tamillk news-srilanka

tamillk news - srilanka tamil news


 srilanka tamil news - இன்று ஆரம்பமாகியுள்ள நீண்ட வார இறுதி விடுமுறையின் பல்வேறு பிரதேசங்களுக்கு சுற்றுலாப் பயணங்களை மேற்கொள்ளும் போது போக்குவரத்தில் விசேட கவனம் செலுத்துமாறு பொலிஸார் மக்களை கோரியுள்ளனர்.


பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ இன்று இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.


தற்போது நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக பொதுமக்களின் பாதுகாப்பினை கருத்திற் கொண்டு இதனை தெரிவிப்பதாக அவர் குறிப்பிட்டார்.




மேலும், இந்த நீண்ட வார இறுதியில், பொலிஸ் போக்குவரத்து உத்தியோகத்தர்கள் நாடளாவிய ரீதியில் விசேட நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படுவார்கள் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்