![]() |
| மொராக்கோவில் பாரிய பூகம்பம் -300 பேர் பலி Tamillk News |
மொராக்கோவை நேற்றிரவு தாக்கிய பாரிய பூகம்பத்தினால் 300க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்.
ஒரு நூற்றாண்டு காலப்பகுதியில் மொராக்கோவை தாக்கிய மிகப்பாரிய பூகம்பத்தினால் பெருமளவு உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.
நள்ளிரவில் மொராக்கோவின் உயரமான அட்லஸ் மலைப்பகுதியை பூகம்பம் தாக்கியுள்ளது( 6.8)
மராகெச் என்ற நகரமே மிகமோசமாக பாதிக்கப்பட்டுள்ளது 296 பேர் உயிரிழந்துள்ளனர் 156 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என ஆரம்ப கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.
தொடர்ச்சியான சிறிய அதிர்வுகள் காணப்படலாம் என மொராக்கோவின் விமானப்படை எச்சரித்துள்ளது.
சேதமடைந்த கட்டிடங்களையும் மக்கள் அச்சத்துடன் வீதிகளுக்கு தப்பியோடுவதையும் சிலர் புகைமண்டலத்திற்கு நடுவில் காணப்படுவதையும் காண்பிக்கும் படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன.
Tags:
world-news



