![]() |
ரவூப் ஹக்கீமின் வருகையை கண்டித்து சாய்ந்தமருதில் போராட்டம்-Tamillk News |
சாய்ந்தமருதில் நடைபெற இருக்கும் நிகழ்வில் கலந்து கொள்வதற்காக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் வருகை தருவதை கண்டித்து போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த கண்டன எதிர்ப்பு போராட்டம் இன்று (15.09.2023) சாய்ந்தமருதில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சாய்ந்தமருது ஜும்மா பெரிய பள்ளிவாசளுக்கு முன்னால் ஜும்மா தொழுகையைத் தொடர்ந்து இந்த போராட்டம் நடைபெற்றுள்ளது.
இதன்போது போராட்டக்காரர்கள், “நாளை (16) ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் முன்னாள் அமைச்சர் எம்.எச்.எம்.அஷ்ரபின் 23ஆவது நினைவு நாள் சாய்ந்தமருதில் தேசிய நிகழ்வாக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் நிலையில் அவர் சாய்ந்தமருதுக்கு வரக்கூடாது” என்று வலியுறுத்தியுள்ளனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது ரவூப் ஹக்கீம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் ஆகியோர்களின் கொடும்பாவிகள் எரிக்கப்பட்டதுடன், அவர்களது வருகையை கண்டிக்கும் வகையிலான பதாதைகளையும் போராட்டக்காரர்கள் தாங்கியிருந்தனர்.
இதனால் சாய்ந்தமருது கல்முனை பிரதான வீதியுடான போக்குவரத்து சிறிது நேரம் தடைப்பட்டதுடன் நிலமையை வழமைக்கு கொண்டு வரும் முயற்சியில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.
இப்போராட்டத்தில் பொது சேவை ஆணைக்குழுவின் முன்னாள் உறுப்பினரும், தேசிய காங்கிரஸின் கடந்த பொதுத் தேர்தல் வேட்பாளருமான ஏ.எல்.எம்.சலீம், கல்முனை மாநகரசபை முன்னாள் உறுப்பினர்கள், கடந்த உள்ளூராட்சிமன்ற வேட்பாளர்கள், ஏனைய கட்சிகளின் முக்கியஸ்தர்கள், பொது அமைப்புக்களின் பிரதானிகள் உட்பட பொதுமக்களின் ஒரு பகுதியினர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
Srilsnka Tamil News