2024 ஆம் ஆண்டுக்கான முதலாம் தவணை பாடசாலை கல்வி நடவடிக்கைகள் பெப்ரவரி 19 ஆம் திகதி ஆரம்பமாகும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
மூன்றாம் தவணை
க.பொ.த உயர்தரப் பரீட்சை அடுத்தாண்டு ஜனவரி மாதம் நடைபெறவுள்ள நிலையில் 2023 ஆம் ஆண்டுக்கான மூன்றாம் தவணை பாடசாலை விடுமுறை எதிர்வரும் டிசம்பர் மாதம் 22 ஆம் திகதி வழங்கப்படவுள்ளது.
இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கை
கடந்த முதலாம் திக்தி ஆரம்பமான இந்த வருடத்தின் 3ம் தவணையின் முதல் கட்டம் டிசம்பர் 22 ஆம் திகதி முடிவடைகின்றது இதனை தொடர்ந்து இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் பெப்ரவரி 2 ஆம் திகதி ஆரம்பமாகும்.