லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் விபத்து! உயிரிழந்தோர் எண்ணிக்கை 170 ஆக அதிகரிப்பு....!

Tamil lk news

  இந்தியாவின் அகமதாபாத் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமான விபத்தில் இதுவரை 170 பேர் உயிரிழந்ததாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.


இன்று பிற்பகல் லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் 2 விமானிகள், 10 ஊழியர்கள் உள்பட 242 பேர் பயணம் செய்துள்ளனர்.



 இதில் 169 பேர் இந்தியர்கள். 53 பேர் இங்கிலாந்தை சேர்ந்வர்கள். ஒருவர் கனடா நாட்டைச் சேர்ந்தவர் எனத் தெரியவந்துள்ளது.


 மேலும் 12 வயதிற்கு உட்பட்ட 14 குழந்தைகள் விமானத்தில் பயணம் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த விபத்தில் 133 பேர் உயிரிழந்ததாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

Tamil lk News


குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டன் காட்விக் விமான நிலையத்திற்கு இன்று (12) மதியம் ஏர் இந்தியாவின் ஏஐ 171 போயிங் விமானம் புறப்பட்டது.



 புறப்பட்ட சில நிமிடங்களில் மேகானி நகர் குடியிருப்பு பகுதி அருகே கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்