தாய்லாந்தின் பிரச்சாப் கிரி கான் மாகாணத்தில் நேற்று, நள்ளிரவில் இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றது.
பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து வேக கட்டுப்பாட்டை இழந்து சரிந்து வீழ்ந்த நிலையில் 14 பேர் உடல் நசுங்கி பலியாகினர் தெரிய வந்துள்ளது .
இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டனர்
சிறிது நேரத்தில் சாலையோரத்தில் உள்ள மரத்தின் மீது பயங்கரமாக மோதியதியுள்ளது. இதில் பேருந்தின் முன்பகுதி இரண்டாக பிளந்ததாக விசாரணைகளில் தெரிய வந்துள்ளது .
தகவல் அறிந்த மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பேருந்தின் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டனர்.
இந்த விபத்தில் 14 பேர் உடல் நசுங்கி பலியாகியதோடு 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும். காயமடைந்த அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர் குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அந் நாட்டு அரசு போக்குவரத்து நிறுவனம் தெரிவித்துள்ளமை என்பதும் குறிப்பிடத்தக்கது.



