எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் 18% வற் வரி அமுல்படுத்தப்பட்டதன் பின்னர் பெற்றோலின் விலை அதிகரிக்குமானால், அடுத்த மாதம் முச்சக்கர வண்டி கட்டணம் அதிகரிக்கப்படும் என அகில இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த அகில இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் சங்கத்தின் தலைவர் லலித் தர்மசேகர,
எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் அதிகரித்து வரும் எரிபொருள் விலைக்கு ஏற்ப முதல் கிலோமீட்டருக்கான கட்டணம் அதிகரிக்கப்படும்.
VAT திருத்தத்துடன் விலைகள்
கடந்த காலங்களில் அரசாங்கம் பெற்றோல் விலையை உயர்த்திய சந்தர்ப்பங்களில் விலைகளை திருத்துவதற்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும், ஆனால் VAT திருத்தத்துடன் விலைகள் அதிகரிக்கப்படும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Tamillk News WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
Tags:
srilanka



