ஆற்றில் நீராடிக்கொண்டிருந்த பாடசாலை மாணவர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் நேற்று (02) காலை நாரம்மல, மெட்டியகனே மஹாவெவ பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று காலை மூன்று மாணவர்கள் ஆற்றுக்கு நீராடச் சென்றுள்ளனர். அவ்வேளை அவர்களில் ஒரு மாணவர் நீரில் மூழ்கிய நிலையில், அங்கிருந்த சிலர் அவரை மீட்டு தம்பதெனிய மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
அப்போது மாணவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த மாணவர் மாரவிட, தம்பதெனிய பகுதியை சேர்ந்தவர் ஆவார்.
srilanka tamil news



