(vavuniya tamil news-tamillk) வுனியாவில் கொரோனா தொற்றால் ஒருவர் நேற்று(3) இரவு உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அனுராதபுரம் பதவியா பிரதேசத்தை சேர்ந்த 55 வயதான குறித்த நபர் சிறுநீரகநோய் காரணமாக வவுனியா பொதுவைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பரிசோதனையில் கொவிட் தொற்று
எனினும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ள நிலையில் அவருக்கு கொரோனா தொற்று பீடித்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
அவருக்கு முன்னெடுக்கப்பட்ட துரித அன்ரியன் பரிசோதனையில் கொவிட் தொற்று பீடித்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
வவுனியாவில் ஒருவருடங்களிற்கு பின்னர் மீண்டும் ஒருவர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார்.
மேலும், அண்மையில் கம்பளை பிரதேசத்தை சேரந்த ஒருவரும் கம்பஹா பிரதேசத்தை சேரந்த ஒருவரும் உயிரிழந்துள்ள நிலையில் அவர்களுக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Tamillk News WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
Tags:
Vavuniya-news