செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருப்பதை: உறுதி செய்த ஐரோப்பிய விண்வெளி நிறுவனம்!

 செவ்வாய் கிரகத்தில்  தண்ணீர் இருப்பதை ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் ஒன்று உறுதி செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Water on Mars


செவ்வாய் கிரகத்தில் மனிதன் வாழக்கூடிய வசதிகள் இருப்பதற்கான ஆதாரங்களை கண்டறியும் ஆய்வுகளை விண்வெளி நிறுவனங்கள் மேற்கொள்கின்றன.

செவ்வாய் கிரகத்தில்

செவ்வாய் கிரகத்தில் நீராதாரம் இருப்பதற்கான ஆதாரங்கள் ஏற்கனவே இருந்தாலும், அவை உறுதிப்படுத்தப்படவில்லை.

தற்போது ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தின் "பிரிசெப்ட்" என்ற ரோவர், செவ்வாய் கிரகத்தில் நீர் இருப்பதை உறுதி செய்துள்ளது.


பிரிசெப்ட் ரோவர், செவ்வாய் கிரகத்தில் உள்ள ஜெசெரோஸ் என்ற பள்ளத்தாக்கில் ஆய்வு நடத்தி வருகின்றது.


ஏற்கனவே அந்தப் பள்ளத்தாக்கில், நீர் ஆதாரங்கள் கண்டறியப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், பிரிசெப்ட் ரோவர், ஜெசெரோஸ் பள்ளத்தாக்கில் உள்ள மண்ணில் உள்ள நீரின் அளவை அளவிடும் சோதனைகளை நடத்தியது.




அந்த சோதனைகளின் முடிவில், செவ்வாய் கிரகத்தில் சுமார் 3.7 கிமீ தொலைவிற்கு பனிக்கட்டி படலம் இருப்பதாகவும், இவை உருகினால் அந்த கிரகத்திற்கு தேவையான தண்ணீர் கிடைக்கும் எனவும் தெரிவித்துள்ளது.




செவ்வாய் கிரகத்தில் நீராதாரம் உறுதி செய்யப்பட்டுள்ளதால் அங்கு உயிர்கள் வாழ வாய்ப்பு இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகரித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.    


புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்