கொழும்பில் இருந்து கம்பஹா வரை ரயிலில் பயணித்த யுவதிக்கு கோட்டை நிலையத்தில் இருந்து ஹுனுப்பிட்டிக்கு மட்டும் பயணச்சீட்டு வழங்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், கம்பஹாவில் வைத்து அவரை சோதனையிட்ட பரிசோதகர்கள் அபராதம் என கூறி அவரிடம் கட்டணம் வசூலிக்க முற்பட்டுள்ளனர்.
இதனால் அங்கு யுவதியின் சகோதரர் ஒருவரும், பயணச்சீட்டு பரிசோதகர்கள் இருவரும் மோதலில் ஈடுபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
மோதலில் காயமடைந்தவர்கள் கம்பஹா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக ரயில்வே திணைக்களம் உள்ளக விசாரணையை ஆரம்பித்துள்ளதாக ரயில்வே போக்குவரத்து பிரதி பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Tamillk News WHATSAPP CHANNELS இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
Tags:
srilanka