இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் பெற்றோல், டீசல் விலைகளில் அதிரடி மாற்றம்!

 இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.


 இலங்கை கனியவளக் கூட்டுத்தாபனம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.


 ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 13 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளது. 


 ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் புதிய விலை 355 ரூபாவாக நிர்ணயிக்கப்படவுள்ளது.


ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 16 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளது. 



 இன்று நள்ளிரவு முதல் ஒரு லீற்றர் ஒட்டோ டீசல் 317 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படவுள்ளது.


 மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 13 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளது. 



ஒரு லீற்றர் மண்ணெண்ணெய் 202 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படவுள்ளது.

(Srilanka Tamil News.....)

புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்