200 அடி பள்ளத்தில் வீழ்ந்து கார் விபத்து ; ஒருவர் காயம்...!

 ஹட்டன் - மஸ்கெலியா வீதியில் நோர்வூட் பிரதேசத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் பயணித்த கார் ஒன்று 200 அடி ஆழமுடைய பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.


இந்த விபத்து நேற்று (6) வியாழக்கிழமை மாலை 5.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

tamil lk news


மஸ்கெலியா பிரதேசத்தில் இறுதிச் சடங்கில் கலந்துகொண்டு மீண்டும் கொழும்பு, கிராண்ட்பாஸ் பிரதேசத்தை நோக்கிப் பயணித்த காரொன்று எதிர் திசையில் பயணித்த பஸ் ஒன்றுக்கு வழிவிடும் போது காரானது வீதியை விட்டு விலகி காசல்ரீ நீர்த்தேக்கத்திற்கு அருகில் உள்ள 200 அடி ஆழமுடைய பள்ளத்தில் வீழ்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

வைத்தியசாலையில்

விபத்தின் போது காரில் பயணித்த பெண் ஒருவர் காயமடைந்துள்ள நிலையில் திக்ஓயா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.





விபத்துக்குள்ளான காரில் குழந்தை உட்பட நால்வர் பயணித்துள்ள நிலையில் காரில் பயணித்தவர்கள் பாதுகாப்பு இருக்கைப் பட்டையை அணிந்திருந்ததால் பெரிதளவான காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

(Srilanka Tamil News......)

புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்