வேலை நிறுத்தத்திற்கு தயாராகும் அரச ஊழியர்கள்...! 09ம் திகதி அலுவலகங்கள் முடங்குமா? வெளியான அறிவிப்பு

சம்பள முரண்பாடு, சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து அரச சேவையில் பணியாற்றும் பல துறைகளைச் சேர்ந்த தொழிற்சங்க ஊழியர்கள் எதிர்வரும் 09ம் திகதி சுகயீன விடுமுறை போராட்டம் ஒன்றை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளனர்.


அதேநேரம் ஆசிரியர்கள் - அதிபர்களும் அன்றைய தினம் சுகயீன விடுமுறை அறிவித்து பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக  இலங்கை ( Srilanka) ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.




கடந்த வாரமும் அதிபர் ஆசிரியர் சங்கங்கள் சுகயீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபட்டதுடன் கொழும்பில் பெருமளவான அதிபர் ஆசிரியர்கள் திரண்டு பாரிய கவனயீர்ப்பு போராட்டமொன்றினையும் முன்னெடுத்திருந்தமை  குறிப்பிடத்தக்கது.

Srilanka Tamil News - Tamil lk News

புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்