வவுனியாவில் விபச்சாரத்தில் ஈடுபட்ட 4 பெண்கள் கைது

 

tamil lk news

வவுனியா,(Vavuniya) தேக்கவத்தைப் பகுதியில் விடுதி ஒன்றில் விபச்சாரத்தில் ஈடுபட்டதாக 4 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.


இக்கைது நடவடிக்கை வவுனியா, தலைமைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையில் பொலிசார் விசேட கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். 


இதன்போது தேக்கவத்தைப் பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் சோதனை செய்த போது, அங்கு  விபச்சாரத்தில் ஈடுபட்டதாக 4 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.



கைது செய்யப்பட்டவர்கள் வவுனியா மற்றும் காலி ஆகிய இடங்களைச் சேர்ந்தவர்களாவர். 



மேலதிக விசாரணைகளின் பின் அவர்களை  நீதிமன்றில் முற்படுத்த பொலிசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Vavuniya Tamil News



புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்