தேசபந்து தென்னகோன் பொலிஸ்மா அதிபராக கடமையாற்றுவதற்கு உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.
குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,
தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபராக நியமிப்பதற்கு ஜனாதிபதி எடுத்த தீர்மானத்தை இரத்துச் செய்யும் வகையில் உத்தரவைப் பிறப்பிக்குமாறு கோரி கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை உள்ளிட்டோர் முன்வைத்த 09 அடிப்படை உரிமை மீறல் மனுக்களை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட உயர் நீதிமன்றம், இந்த உத்தரவை பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Srilanka Tamil News