திருட சென்ற இடத்தில் ஏமாற்றம்; 20 ரூபா டிப்ஸ் வைத்து சென்ற கொள்ளையன்!

tamil lk newsw


 திருட வந்த ஓட்டலில் திருடுவதற்கு எதுவும் இல்லாததால் விரக்தியடைந்த திருடன் இரக்கப்பட்டு 20 ரூபாயை அங்கு வைத்து சென்ற சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.


இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


அதில் முகத்தை துணியால் மறைந்துள்ள திருடன் திருடுவதற்கு எந்த மதிப்புமிக்க பொருளும் கிடைக்காமல் விரக்தியடைந்து 20 ரூபாய் நோட்டை அங்கு வைத்து செல்கிறார்.




கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு நடந்த சம்பவம் இப்போதுதான் வெளிச்சத்திற்கு வந்துள்ள நிலையில், சம்பவம் தொடர்பில் வழக்கு பதிந்துள்ள பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்