தண்டவாளத்தின் மீது குடைவிரித்து உறங்கிய நபர்

tamil lk news


இந்தியாவின் உத்தர பிரதேசத்தில் தண்டவாளத்தின் மீது தலை வைத்து தூங்கிய நபரால் அவ்வழியாக வந்த ரயில் நிறுத்தப்பட்டதால் அவர் உயிர் தப்பிய நிலையில் குறித்த காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.


எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் இந்த காணொளி பகிரப்பட்டுள்ளது. அதில், “பயன்பாட்டில் உள்ள ரயில் தண்டவாளத்தின் மீது தலை வைத்து ஒருவர் படுத்திருக்கிறார். அவருக்கு பின்னால் ஒரு குடை நிழலுக்காக விரிக்கப்பட்டிருந்தது.


அந்த நேரத்தில் அவ்வழியாக ஒரு ரயில் வந்துள்ளது. நல்ல வேளையாக இதை கவனித்த ஓட்டுநர் ரயிலை நிறுத்திவிட்டு அந்த நபரை நோக்கி செல்கிறார். ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த அவரை எழுப்பி அப்புறப்படுத்திவிட்டு ரயிலை ஓட்டிச் சென்றார்” என பதிவிடப்பட்டுள்ளது.


இந்நிலையில், ரயில் ஓட்டுநர் கவனிக்காமல் சென்றிருந்தால் அந்த நபர் உயிரிழந்திருப்பார். அத்துடன் அந்த ரயில் விபத்தில்சிக்கியிருக்கவும் வாய்ப்பு உள்ளது. உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரிலிருந்து பிரதாப்கர் நகருக்கு செல்லும் பாதையில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது.



Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்