யாழில் கசிப்பு விற்பனையில் ஈடுபட்டவர் கைது! (Jaffna News)

 

tamil lk news

யாழ்ப்பாணம் (Jaffna)- கொழும்புத்துறை பகுதியில் கசிப்பு காய்ச்சி விற்பனையில் ஈடுபட்ட ஒருவர் காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.


குறித்த கைது நடவடிக்கையானது இன்று (07) முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.


இதேவேளை யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு காவல்துறையினரால் கோப்பாய் பகுதியைச் சேர்ந்த 21 வயதான இளைஞனே இவ்வாறு கைது செய்யப்பட்டார்.


இதன்போது 227 போத்தல் கோடாவும் கசிப்பு காய்ச்சும் உபகரணங்களும் கைப்பற்றப்பட்டதாக குறிப்பிடப்படுகின்றது.


குறித்த சந்தேக நபர் கொழும்புத்துறையிலும் வட்டுக்கோட்டையிலும் வீடுகளை வாடகைக்கு எடுத்து கசிப்பு காய்ச்சி பல இடங்களில் விற்பனையில் ஈடுபட்டாரென காவல்துறையினர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

Jaffna Tamil News



Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்