சிறிலங்கா கடற்படையினர் கைப்பற்றிய பெருமளவு தங்கம் !

 

tamil lk news

சிறிலங்கா கடற்படையினரால் கல்பிட்டி தோராயடி கடற்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது 4 கிலோ 740 கிராம் தங்கம் அடங்கிய பொதி ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது.


இந்த நடவடிக்கையில் கடற்கரைக்கு அருகில் தங்கம் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் கண்ணாடி இழை படகு ஒன்றும் கைப்பற்றப்பட்டது.

tamil lk news


கடல் வழிகள் ஊடான சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுப்பதற்கான கடற்படையின் வழக்கமான சோதனை நடவடிக்கைகளின்போதேஇந்த தங்கம் கண்டுபிடிக்கப்பட்டது.


கடத்தல்காரர்கள் வேண்டுமென்றே தங்கப் பொதியை மூழ்கடித்திருக்கலாம் என நம்பப்படுகிறது.


மீட்கப்பட்ட தங்கம் மற்றும் படகு மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கட்டுநாயக்கவிலுள்ள சுங்கத் தடுப்பு அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

Srilanka Tamil News



Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்