வவுனியாவில் மோட்டார் சைக்கிள் திருட்டு... முல்லைத்தீவு இளைஞன் அதிரடி கைது! (Vavuniya News)

tamil lk news


 வவுனியா பகுதியில் இரண்டு மோட்டர் சைக்கிள்கள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் மல்லாவி இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


கடந்த 06-08-2024ஆம் திகதி வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த மேடாட்டர் சைக்கிள் ஒன்றை காணவில்லை என அதன் உரிமையாளர் வவுனியா பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார்.


குறித்த முறைப்பாடு தொடர்பில் வவுனியா தலைமைப் பொலிஸ் பொறுப்பதிகார் ஜெயக்கொடி அவர்களின் வழிகாட்டலில் உப பொலிஸ் பரிசோதகர் அகமட் தலைமையில் பொலிஸ் குழுவினர் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.


இதன்போது முல்லைத்தீவு, மல்லாவியைச் சேர்ந்த 27 வயது இளைஞன் ஒருவனை சந்தேகத்தின் பேரில் கைது செய்திருந்தனர்.


கைது செய்யப்பட்ட இளைஞனிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு அருகில் திருடப்பட்ட மோட்டர் சைக்கிள் மீட்கப்பட்டது.


தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் போது கடந்த யூன் மாதம் 29 ஆம் திகதி வவுனியா புதிய பேருந்து நிலையத்திற்கு அருகில் விடப்பட்ட நிலையில் காணமல்போன மோட்டர் சைக்கிளும் மல்லாவியில் கண்டுபிடிக்கப்பட்டது.


இரண்டு மோட்டர் சைக்கிள்களும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளதுடன், கைது செய்யப்பட்ட இளைஞனை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

Vavuniya Tamil News



Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்