பதுளை பசறை வீதியில் பதுளை முத்தியங்கனை விகாரைக்கு அருகாமையில் கார் ஒன்று வேக கட்டுப்பாட்டை இழந்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 7 மோட்டார் சைக்கிளில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து இன்று (11) காலை இடம்பெற்றுள்ளது. விபத்தில் இருவர் காயமடைந்துள்ளதுடன், அவர்கள் பதுளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இதனையடுத்து, சந்தேகநபரான காரின் சாரதியை பதுளை போக்குவரத்து பொலிஸார் கைதுசெய்யப்பட்டுள்ளார். மேலும் விபத்து தொடர்பாக மேலதிக விசாரணைகளை பதுளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Srilanka Tamil News