புத்தளம், முந்தல் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஹமா எலிய பகுதியில் உள்ள வீடொன்றில் பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மஹமா எலிய பதுலுஓய பிரதேசத்தைச் சேர்ந்த 27 பெண்ணே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில், சடலமாக மீட்கப்பட்ட பெண் தனது கணவருடன் வீட்டில் வசித்து வந்த நிலையில், கணவன் அங்கிருந்து தப்பியோடியுள்ளார் என்று தெரியவந்துள்ளது.
சடலம் புத்தளம் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முந்தல் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.