வவுனியாவில் அன்மைய நாட்களை விடவும் இன்றையதினம் சற்று அதிக பனிமூட்டமாகக் காணப்படுகின்றது.
கடும் பனிமூட்டம் காரணமாகப் போக்குவரத்தை மேற்கொள்வதில் வாகன சாரதிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
குறிப்பாக ஏ9 வீதி மற்றும் மன்னார் வீதிகளில் பயணிக்கும் வாகனங்கள் ஒளியைப் பாய்ச்சியபடி சென்றமையை அவதானிக்கக்கூடியதாக இருந்தது.
Vavuniya News